மதுரை

கல்லூரியில் கணிதவியல் திறன் போட்டி

DIN

உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கணிதம் சார்ந்த போட்டிகள் நடைபெற்றன. இதை கல்லூரி செயலர் மணிவளன் தொடக்கி வைத்தார். கல்லூரி இணை முதல்வர் மைக்கல் ஜான்பீட்டர் வாழ்த்துரை வழங்கினார். இதில் 13 கல்லூரிகளிலிருந்து 225 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 
கணித விநாடி வினா உள்ளிட்ட 9 போட்டிகள் நடைபெற்றன. போட்டியின் முடிவில் திண்டுக்கல் ஜி.டி.என்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் முதல் பரிக்கான சுழற்கேடயத்தை பெற்றனர்.
2 ஆம் இடத்தை சிவகாசி  அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியும் பூவந்தி மீனாட்சி மகளிர் கல்லூரியும் பெற்றன. பரிசுகளை கல்லூரி முதல்வர் பேசில்சேவியர் வழங்கினார். 
போட்டிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பிரதிபா ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சிகள்

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நடால்

மே தினம்: முதல்வா், தலைவா்கள் வாழ்த்து

வைக்கோல் கட்டு ஏற்றிவந்த மினி லாரியில் தீப்பிடித்து விபத்து

காங்கயம் சௌடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா

SCROLL FOR NEXT