மதுரை

நீதிமன்றத்திற்கு வந்தவரை கொல்ல வெடிகுண்டுகளுடன் வந்த 5 பேர் கைது

DIN


மதுரை மாவட்ட  நீதிமன்ற விசாரணைக்கு வந்தவரை கொலைச் செய்ய நாட்டு வெடிகுண்டு, ஆயுதங்களுடன் வந்த 5 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
மதுரை மாவட்ட  நீதிமன்றம் அருகே ஆட்டோவில்  ஆயுதங்கள் மற்றும் நாட்டு வெடி குண்டுகளுடன் இளைஞர்கள் 
ஆட்டோவில் சுற்றி வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 
இதையடுத்து அண்ணாநகர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று ஆட்டோவில் சுற்றி திரிந்தவர்களை விரட்டி பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், மதுரையில் 
கொலை செய்யப்பட்ட  ராமர் என்பவரின் தம்பி லஷ்மணன் 
மற்றும்  திருமலை, சூர்யா ஆனந்த் உள்ளிட்ட 5 பேர் என்பதும் தெரியவந்தது.
மேலும் போலீஸார் நடத்திய விசாரணையில் ராமர் கொலை வழக்கில் குற்றவாளி மதுரை மாவட்ட நீதிமன்ற விசாரணைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அவரை கொலைச் செய்வதற்காக வந்தாகவும், அதற்காக ஆயுதங்கள், நாட்டு வெடிகுண்டுகள் எடுத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். 
இதையடுத்து, 5 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT