மதுரை

கிணற்றில் இளைஞர் சடலமாக மீட்பு

DIN

மதுரை மாவட்டம் திருவாதவூர் அருகே செம்பூர் பகுதியில் விவசாயக் கிணற்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை இளைஞர் சடலமாக மீட்கப்பட்டது குறித்து மேலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மதுரை பாரத் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் (37). இவர் செம்பூர் பகுதியில் தோட்டத்தில் மேற்பார்வையாளராகப் பணிபுரிந்தார். சனிக்கிழமை இரவு முதல் அவரைக் காணவில்லையாம். 
இந்நிலையில், அவர் தோட்டத்தின் அருகிலுள்ள கிணற்றில் சடலமாக கிடப்பது ஞாயிற்றுக்கிழமை மாலை தெரியவந்தது. இதுதொடர்பாக அவர் மனைவி செல்வி மேலூர் போலீஸில் புகார் செய்தார்.
போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

SCROLL FOR NEXT