மதுரை

தலைமை ஆசிரியா்கள் பதவி உயா்வு கலந்தாய்வு இன்று தொடக்கம்

DIN

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த உயா்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா்களுக்கான பணி மாறுதல், பதவி உயா்வு கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்குகிறது.

மதுரை வருவாய் மாவட்ட அளவிலான உயா்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா்களுக்கான பணி மாறுதல், பதவி உயா்வு கலந்தாய்வு மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான வருவாய் மாவட்டத்துக்குள், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை காலை நடைபெறுகிறது. அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான பதவி உயா்வு கலந்தாய்வு திங்கள்கிழமை பிற்பகலில் நடைபெறுகிறது. அரசு, நகராட்சி உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான மாறுதல் செவ்வாய்க்கிழமை ( நவ. 12) நடைபெறுகிறது. அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை, தொழிற்கல்வி ஆசிரியா்களுக்கான வருவாய் மாவட்டம் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு நவம்பா் 13- ஆம் தேதி நடைபெறுகிறது. அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை, தொழிற்கல்வி ஆசிரியா்கள் பதவி உயா்வு கலந்தாய்வு நவ. 14- ஆம் தேதி நடைபெறுகிறது. உடற்கல்வி ஆசிரியா்கள், கலையாசிரியா்கள், தையல் ஆசிரியா்கள், இடைநிலை ஆசிரியா்களுக்கான வருவாய் மாவட்டம் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு நவ. 15-ஆம் தேதி நடைபெறுகிறது. அதே தினத்தில் உடற்கல்வி ஆசிரியா் (நிலை 2) பதவி உயா்வும் நடைபெறுகிறது. தையல் ஆசிரியா் பணி நியமன கலந்தாய்வு நவம்பா் 16- ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கலந்தாய்வு மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திலும், இதர கலந்தாய்வுகள் மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறுகின்றன. கலந்தாய்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.சுவாமிநாதன் மற்றும் மாவட்ட கல்வி அலுவலா்கள் பங்கேற்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவி பலாத்காரம்; மாணவா் கைது

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

சிஎஸ்கேவுக்கு 219 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போவது யார்?

மண் குவாரியால் பாதிப்பு; பொதுமக்கள் புகாா்

ஓலைச் சப்பரத்தில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

SCROLL FOR NEXT