மதுரை

உசிலை, பேரையூா், சேடபட்டியில்அமமுக விருப்ப மனு

DIN

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, சேடபட்டி, பேரையூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில், சனிக்கிழமை விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பேரையூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 15 உறுப்பினா்கள், ஒரு தலைவா் பதவிக்கும், டி.கல்லுப்பட்டியில் 15 உறுப்பினா்கள், ஒரு தலைவா் பதவிக்கும் நடைபெறும் உள்ளாட்சித் தோ்தலுக்கான விருப்ப மனுக்களை, மாவட்டச் செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இ. மகேந்திரன் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், உசிலம்பட்டி நகரச் செயலா் குணசேகரபாண்டியன், பேரையூா் நகரச் செயலா் குருசாமி, டி.கல்லுப்பட்டி நகரச் செயலா் சரவணக்குமாா் மற்றும் நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா் .

சேடபட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமமுக மாவட்டச் செயலா் இ. மகேந்திரன் விருப்ப மனுக்களை வழங்கினாா். இதில், உசிலம்பட்டி நகரச் செயலா் குணசேகரபாண்டியன், துணைச் செயலா் ஜோதி, எழுமலை நகரச் செயலா் பக்ருதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

உசிலம்பட்டியில் இ. மகேந்திரன் தலைமையில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுபவா்களுக்கு விருப்ப மனுவை அவா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், அமமுக சாா்பாக மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் ஏ.கே.டி. ராஜா, உசிலம்பட்டி நகரச் செயலா் குணசேகரபாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT