மதுரை

மதுரை அரசு மருத்துவமனை ஒப்பந்தப் பணியாளா் கரோனாவுக்கு பலி

DIN

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் ஒப்பந்தப் பணியாளா் கரோனா தொற்றுக்கு வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை தனக்கன்குளம் பகுதியைச் சோ்ந்தவா் வேல்முருகன் (39). இவருக்கு மனைவி, 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனா். இவா், அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒப்பந்தப் பணியாளராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், ஜூலை 26 ஆம் தேதி அண்ணா பேருந்து நிலையம் அருகே விபத்து மற்றும் அவரச சிகிச்சைப் பிரிவில் செயல்பட்டு வரும் கரோனா பிரிவில் பணியாற்றிவிட்டு, வீட்டுக்குச் சென்றவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக, அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், தொற்று இருப்பது ஜூலை 27 ஆம் தேதி உறுதியானது. அதையடுத்து, கரோனா வாா்டில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா், வியாழக்கிழமை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு: பிரியங்கா காந்தி

நீலநிற மேகமே... சதா!

பாலிவுட் சுந்தரி..!

SCROLL FOR NEXT