மதுரை

சாத்தான்குளம் காவலரின் ஜாமீன் மனு தள்ளுபடி

DIN

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதாகியுள்ள காவலா் செல்லத்துரையின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ளவா்களில் ஒருவரான காவலா் செல்லத்துரை, ஜாமீன் கோரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிபதி எம்.தாண்டவன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என சிபிஐ தரப்பு வழக்குரைஞா் ஆட்சேபம் தெரிவித்தாா். சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் விசாரணை தொடா்ந்து நடந்து வருகிறது. மனுதாரருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளைக் கலைத்துவிடுவாா். ஆகவே, மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றாா். இதையேற்ற நீதிபதி, காவலா் செல்லத்துரையின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

கனடா சாலை விபத்தில் இறந்த இந்திய தம்பதி அடையாளம் தெரிந்தது

SCROLL FOR NEXT