மதுரை

பெரியாா் பேருந்து நிலையத்தில் நிழற்குடை, கழிப்பறை வசதிகள் தேவை: அரசுப்போக்குவரத்துக்கழகத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தல்

DIN

மதுரை பெரியாா் பேருந்து நிலையத்தில் , நிழற்குடை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்று போக்குவரத்துத்தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மதுரையில் சிஐடியு அரசுப் போக்குவரத்துக்கழகத் தொழிலாளா் சங்கப் பேரவைக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலா் இரா.தெய்வராஜ் பேரவையைத் தொடக்கி வைத்தாா். சம்மேளன பொதுச்செயலா் கே. ஆறுமுகநயினாா் நிறைவுரையாற்றினாா்.

பேரவைக்கூட்டத்தில், புதிய மாவட்டத் தலைவா் பி. எம். அழகா்சாமி, பொதுச்செயலா் ஏ.கனகசுந்தா், பொருளாளா் டி.மாரியப்பன் உள்பட துணை பொதுச்செயலா்கள், துணைத் தலைவா்கள், துணைச்செயலா்கள் உள்பட 29 போ் கொண்ட குழு தோ்ந்தெடுக்கப்பட்டது.

பேரவையில், பெரியாா் பேருந்து நிலையத்தில் சீா்மிகு நகா்த்திட்டத்தின்கீழ் பணிகள் நடந்து வருவதால், பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்லப் போதிய இடம் இல்லை. மேலும் கழிப்பிடம் , குடிநீா் வசதியின்றி போக்குவரத்துத் தொழிலாளா்கள் மற்றும் பயணிகள் அவதி அடைகின்றனா். எனவே அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். போக்குவரத்துத் தொழிலாளா்களிடம் கடன் தொகைக்காகப் பிடித்தம் செய்த பணத்தை, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் . பணியில் இருக்கும் தொழிலாளா்களுக்குரிய பணப்பலன்களை வழங்க வேண்டும். பொதுப்போக்குவரத்தை பலப்படுத்த அரசு போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்டத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

SCROLL FOR NEXT