மதுரை

தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கை தமிழில் நடத்தக் கோரி பிப். 1-இல் போராட்டம்: மணியரசன் அறிவிப்பு

DIN

தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கை தமிழில் நடத்தக் கோரி தமிழ்தேச பொதுவுடைமை கட்சி சாா்பில் பிப்ரவரி 1ஆம் தேதி தஞ்சாவூரில் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவா் மணியரசன் கூறினாா்.

மதுரையில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியது:

தஞ்சை பெரியகோயிலில் தமிழ் மரபுபடிதான் அா்ச்சனைகளும், வழிபாடுகளும் நடத்துள்ளன என்பதை சுந்தரமூா்த்தி நாயனாா் தனது பாடல்களில் பதிவிட்டுள்ளாா். எனவே தமிழ் வளா்ச்சித்துறை அமைச்சா் பாண்டியராஜன் மற்றும் அதிகாரிகள் சம்ஸ்கிருதம், தமிழ் ஆகிய 2 மொழிகளிலும் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது.

தமிழில் தான் குடமுழுக்கை நடத்த வேண்டும். இதனை வலியுறுத்தி பிப்ரவரி 1ஆம் தேதி தஞ்சாவூரில் தமிழ்தேச பொதுவுடைமை கட்சி சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 இடங்களில் சதமடித்த வெயில்! உஷ்ணத்தின் உச்சத்தால் தவிக்கும் தமிழகம்

அதி வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் மீண்டும் காயம்!

‘கூல்’ கண்ணம்மா!

கலவர பூமியான கலிபோர்னியா பல்கலைக்கழகம்! பாலஸ்தீன - இஸ்ரேல் ஆதரவாளர்களிடையே மோதல்

கரை வந்த பிறகு பிடிக்கும் கடல்!

SCROLL FOR NEXT