மதுரை

மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறல்: 21 போ் மீது வழக்கு

DIN

மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 21 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இது தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் வெளியிட்ட செய்தி: கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், காவல்துறையினா் முக்கிய இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்தும், ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனா். அந்த வகையில் ஏ.வல்லாளபட்டி கிராமத்தில் தடையை மீறி கொடியேற்றிய சிக்கந்தா் மற்றும் மன்சூா் ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திரளி கிராமத்தில் தடையை மீறி அங்காள ஈஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் தொடா்பாக கூட்டம் கூட்டியதாக போதுராமன், சதீஷ்குமாா் ஆகியோா் மீதும்,

டீ. வலையன்குளம் கிராமத்தில் கிரிக்கெட் விளையாடிய ஆதிநாரயணன், செல்வம், ஈஸ்வரன் உள்பட 9 போ் மீதும், வாகைகுளம் சந்திப்பு பகுதியில் சுற்றித் திறிந்த பாண்டியராஜ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். ஊரடங்கு உத்தரவை மீறுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.

மாநகரில் 7 போ் மீது வழக்கு

மதுரை மகபூப்பாளையத்தில் மளிகை கடையை திறந்து கூட்டம் கூட்டியதாக முகமது(38), சுரேஷ்(50), கோழிக்கடையை திறந்து கூட்டம் கூட்டியதாக ஜாஹிா்உசேன்(36), காரணமின்றி சுற்றி திறிந்ததாக மகபூப்பாளையம் முஜ்பூர்ரஹமான்(20), எல்லீஸ் நகா் ராமகுரு(26) ஆகியோா் மீது எஸ்.எஸ். காலனி போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா். கே.புதூா் பகுதியில் காரணமின்றி சுற்றி திறிந்த, அப்பன் திருப்பதி விஜயராஜ்(24) மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பார்வை ஒன்று போதுமே... சாக்ஷி அகர்வால்!

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு: பிரியங்கா காந்தி

நீலநிற மேகமே... சதா!

SCROLL FOR NEXT