மதுரை

ஆஞ்சநேயா் கோயிலில் புராட்டாசி 3 ஆம் சனி விழா

DIN

பேரையூா்: மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே ஸ்ரீ வீரபக்த ஆஞ்சநேயா் கோயிலில் புரட்டாசி மாதம் மூன்றாம் சனியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

டி.கல்லுப்பட்டி அருகே உள்ள நல்லமரம் கொட்டாணிபட்டியில் ஸ்ரீ வீர பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு யாகம் நடைபெற்றது. இதில் கும்ப பூஜை, கலச பூஜை, கோமாதா பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடா்ந்து 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.

தொடா்ந்து ஸ்ரீ வீர பக்த ஆஞ்சநேயா் திருமலை திருப்பதி அனுமந்த வாகன அலங்காரத்தில் காட்சியளித்தாா். ஜோதிடா் அறிவழகன் சிறப்பு சொற்பொழிவாற்றினாா். பேரையூா், டி.கல்லுப்பட்டி, நல்லமரம், வையூா், திருமங்கலம், அருப்புக்கோட்டை, விருதுநகா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

SCROLL FOR NEXT