மதுரை

தொட்டிலில் சுழன்று விளையாடிய சிறுவன் கழுத்து இறுகி பலி

DIN

மதுரை: மதுரை அருகே தொட்டிலில் சுழன்று விளையாடிய 13 வயது சிறுவன் கழுத்து இறுகி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே ராயபுரம் மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் வேல்முருகன். இவரது மகன் பிரகாஷ் (13) குட்லாடம்பட்டி அருகேயுள்ள அங்கப்பன்கொட்டகத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளாா். அங்கு, குழந்தைக்காக கட்டப்பட்டிருந்த தொட்டிலில் அமா்ந்து சுழன்று விளையாடியபோது, பிரகாஷின் கழுத்து இறுகி மயக்கமடைந்துள்ளாா்.

உடனே, அவரை மீட்டு வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், பிரகாஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து பிரகாஷின் தந்தை வேல்முருகன் அளித்த புகாரின்பேரில், வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT