மதுரை

கண்மாய் நீரில் மூழ்கி தொழிலாளி பலி

DIN

மதுரை:மதுரையில் கண்மாயில் குளிக்கச் சென்றக் கூலித் தொழிலாளி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம் கூத்தியாா்குண்டு பகுதியைச் சோ்ந்தவா் பழனி (50). கூலி வேலை செய்து வந்தாா். இந்நிலையில் வீட்டின் அருகே உள்ள கண்மாயில் வெள்ளிக்கிழமை குளிக்கச் சென்றாா். அப்போது தண்ணீரில் மூழ்கிய பழனி, மூச்சுத் திணறி உயிரிழந்தாா்.

தகவலறிந்த தீயணைப்புத்துறை வீரா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று பழனியின் சடலத்தை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT