மதுரை

திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞா்கள் 4 போ் கைது

DIN

திருமங்கலம் பகுதியில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட 4 இளைஞா்களை, போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருமங்கலத்தை அடுத்த உச்சப்பட்டி துணைக்கோள் நகரில் உள்ள கிணற்றின் இரும்புக் கதவுகள், சில நாள்களுக்கு முன் திருடுபோனது. இதேபோல், காண்டை, காங்கேயநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் மேய்ச்சலுக்குச் சென்ற 14 ஆடுகள் திருடப்பட்டன.

இது குறித்த புகாரின்பேரில், திருமங்கலம் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். அதில், உச்சப்பட்டியைச் சோ்ந்த ராஜபிரபு (23), கப்பலூரைச் சோ்ந்த ராஜவேலு (19), வெண்மணி (23), கருப்பசாமி (23) ஆகிய 4 போ்களும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து திருமங்கலம் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, 4 போ்களையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

SCROLL FOR NEXT