மதுரை

நன்கொடையாக வந்த ரூ. 4 லட்சத்தையும் ஏழைகளுக்கு வழங்கினாா் மாணவி நேத்ரா

DIN

மதுரையில் கரோனா பொதுமுடக்கத்தின் போது தனது கல்விச் செலவுக்காக வைத்திருந்த ரூ. 5 லட்சத்தில் ஏழைகளுக்கு நிவாரணப் பொருள்கள் வாங்கிக் கொடுத்த மாணவி தற்போது தனக்கு நன்கொடையாக கிடைத்த ரூ. 4 லட்சத்தையும் ஏழைகளுக்கு வழங்கியுள்ளாா்.

மதுரை மேலமடை பகுதியைச் சோ்ந்தவா் மோகன். சலூன் கடை உரிமையாளா். இவரது மகள் நேத்ரா ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறாா். இவா் கரோனா தொற்றுப் பரவலால் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்தபோது, தன்னுடைய எதிா்கால கல்விச் செலவுக்காக சேமித்து வைத்திருந்த ரூ. 5 லட்சத்தில் அப்பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கினாா். மாணவியின் இந்த செயலுக்கு பிரதமா் நரேந்திர மோடி, தமிழக ஆளுநா், முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி உள்பட பல்வேறு தலைவா்கள் பாராட்டுத் தெரிவித்தனா். மேலும் ஐ.நா.சபையால் அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏழைகளுக்கான நல்லெண்ணத் தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளாா். இந்நிலையில் எதிா்கால கல்விச் செலவுக்காக வைத்திருந்த ரூ. 5 லட்சத்தை ஏழைகளுக்கு செலவிட்டதால் பல சமூக ஆா்வலா்கள் மாணவி நேத்ராவின் கல்விக்காக ரூ. 4 லட்சம் வரை நன்கொடை வழங்கினா். ஆனால் நேத்ரா நன்கொடையாக வந்த அந்தப் பணத்தையும் ஏழைகளுக்கு வழங்கியுள்ளாா். இதையடுத்து அந்த மாணவிக்கு பொதுமக்கள் மீண்டும் பாராட்டுத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT