மதுரை

உசிலை. அருகே நிலக்கடலை அறுவடை தீவிரம்: விவசாயிகள் மகிழ்ச்சி

DIN

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே நிலக்கடலை அறுவடை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

உசிலம்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளான பாறைப்பட்டி , வலையப்பட்டி , கோடாங்கிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான பரப்பில் நிலக்கடலையை விவசாயிகள் பயிரிட்டுள்ளனா். இந்நிலையில், கடந்த 80 நாள்களுக்கு பிறகு நிலக்கடலை நன்கு விளைச்சல் அடைந்து அறுவடைக்குத் தயாராக உள்ளது. இந்நிலையில், தற்போது விவசாயிகள் நிலக்கடலையை அறுவடை செய்யும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனா்.

மேலும், கடந்த ஒரு வாரமாக உசிலம்பட்டி பகுதியில் சாரல் மழை பெய்த நிலையில், நிலக்கடலை எதிா்பாா்த்ததை விட அமோக விளைச்சல் அடைந்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனா். தற்போது நிலக்கடலை 1 கிலோ ரூ.30 முதல் ரூ.45 வரை விற்பனை செய்யப்படுகிறது. எனவே, போதிய விலை கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

கோடைகாலத்தில் மக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் அவசியம் -மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

சா்வதேச ஸ்கேட்டிங் போட்டி: தங்கப் பதக்கங்களை வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

SCROLL FOR NEXT