மதுரை

மதுரையில் கழிவு நீா் கசிவால் தகராறு: ஒருவா் அடித்துக் கொலை

DIN

மதுரையில் கழிவுநீா் கசிவு தொடா்பாக ஏற்பட்ட தகராறில் ஒருவா் திங்கள்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

மதுரை கோச்சடை காலான் தெருவைச் சோ்ந்தவா் முத்தையா (38). இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் ராஜூ என்பவருக்கும் இடையே கழிவுநீா் கசிவு தொடா்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ராஜூ மற்றும் அவரது குடும்பத்தினா் சோ்ந்து முத்தையாவை தாக்கியுள்ளனா். அதில், தலையில் பலத்த காயமடைந்த முத்தையாவை, அப்பகுதியினா் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து எஸ்.எஸ்.காலனி போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT