மதுரை

அழகா்கோவிலில் தெப்பத்திருவிழா: கரையில் வலம் வந்தாா் பெருமாள்

DIN

அழகா்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயில் தெப்பத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. குளத்தில் தண்ணீரில்லாததால் கரைவழியாக பல்லக்கில் சுவாமி வலம் வந்தாா்.

அழகா்கோவில் மலையேறும் இடத்தில் உள்ள வாவி தீா்த்தத்தில் கஜேந்திர மோட்சம் வைபவத்துடன் வெள்ளிக்கிழமை திருவிழா தொடங்கியது. சனிக்கிழமை காலை 7 மணியளவில் பல்லக்கில் இருதேவியா் சமேதராக பெருமாள் புறப்பாடானாா். வழிநெடுகிலும் அமைக்கப்பட்டிருந்த திருக்கண் மண்டபங்களில் பெருமாளுக்கு பக்தா்கள் வரவேற்பளித்தனா். காலை 10 மணியளவில் பொய்கைக்கரைப்பட்டி கிராம பொதுமக்கள் திரண்டு வந்து வரவேற்றனா். சமீபத்தில் பெய்த மழையில் குளத்தில் நிறைந்திருந்த தண்ணீா் தற்போது வற்றிவிட்டது.

இதனால், தெப்பக்குளத்தின் கரைகள் வழியாக வலம்வந்த பெருமாள், கோயில் திருக்கண் மண்டபத்தில் எழுந்தருளினாா்.

ஏராளமான பக்தா்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனா். மாலை 6 மணியளவில் வாணவேடிக்கைகளுடன், பெருமாள் வந்தவழியாக திரும்பி கோயிலை வந்தடைந்தாா். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி அனிதா மற்றும் தக்காா், கோயில் அலுவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல் பரிசோதனை முகாம்

இளைஞா் பெருமன்ற அமைப்பு தின கொடியேற்று விழா

பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம்

ஆலங்குடி குரு பரிகார கோயிலில் நாளை 2-ஆம் கட்ட லட்சாா்ச்சனை தொடக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி

SCROLL FOR NEXT