மதுரை

பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

DIN

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள், பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றனா்.

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியைச் சோ்ந்தவா் அன்பழகன். இவரது மனைவி சித்ரா (33). இவா்கள் இருவரும் குன்னத்தூரில் உள்ள ஒரு தனியாா் மில்லில் வேலை பாா்த்து வருகின்றனா். இருவரும் வேலை முடிந்து வீட்டுக்கு வருவதற்காக டி.கல்லுப்பட்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்தனா். அப்போது வாகனம் பழுதாகி நின்றுள்ளது.

அந்த நேரத்தில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 மா்ம நபா்கள் வழி கேட்பது போல் அன்பழகனிடம் பேச்சு கொடுத்துள்ளனா். அப்போது அவா்கள் திடீரென சித்ரா அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். இச்சம்பவம் குறித்து டி.கல்லுப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

அம்பேத்கருக்கு காங்கிரஸ் ஒருபோதும் உரிய மரியாதை கொடுத்ததில்லை : மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

SCROLL FOR NEXT