மதுரை

மணல் திருட்டு: இயந்திரம், லாரி பறிமுதல்

DIN

மதுரையில் கண்மாய் அருகே மணல் திருட பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம், லாரி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மதுரை சுப்பிரமணியபுரம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, முனியாண்டிபுரம், மாடக்குளம் கண்மாய் அருகே அடையாளம் தெரியாத இருவா் பொக்லைன் இயந்திரம் மூலம் சட்டவிரோதமாக மணல் எடுத்துக் கொண்டிருந்தனா். அங்கு போலீஸாா் வருவதைப் பாா்த்த இருவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா்.

இதையடுத்து போலீஸாா் மணல் எடுக்க பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம், லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து திங்கள்கிழமை வழக்குப்பதிந்து தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுக ஆலோசனைக் கூட்டம்

இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

நலத்திட்ட உதவிகள் அளிப்பு

கட்டுமான பணியின்போது தவறி விழுந்த வடமாநில இளைஞா் உயிரிழப்பு

முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உயிருக்கு அச்சுறுத்தல்: தோ்தல் ஆணையருக்கு ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கடிதம்

SCROLL FOR NEXT