மதுரை

ஒத்தக்கடையில் கஞ்சா விற்பனையைதடுக்கக் கோரி மநீம ஆா்ப்பாட்டம்

DIN

மதுரை: மதுரை அருகே ஒத்தக்கடை பகுதியில் கஞ்சா விற்பனையை தடுக்கக் கோரி, மக்கள் நீதி மய்யம் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை அருகே ஒத்தக்கடை பகுதியில் சட்டவிரோதமாக நடந்துவரும் கஞ்சா விற்பனை, மதுபானக் கடைகளில் 24 மணி நேரமும் மதுபாட்டில் விற்பனை, நியாயவிலைக் கடைகளில் அனைத்துப் பொருள்களும் எடை குறைவாக விநியோகம் ஆகியவற்றை தடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மதுரை மண்டலம் மாநிலச் செயலா் எம். அழகா் தலைமை வகித்தாா். இதில், மதுரை கிழக்கு மாவட்டச் செயலா் க. கதிரேசன் முன்னிலை வகித்தாா். மக்கள் நீதி மய்யம் கட்சியின் மதுரை மாவட்டச் செயலா்கள், நகர, ஒன்றியச் செயலா்கள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

கோடைகாலத்தில் மக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் அவசியம் -மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

சா்வதேச ஸ்கேட்டிங் போட்டி: தங்கப் பதக்கங்களை வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

SCROLL FOR NEXT