மதுரை

பாா்வையற்றோா், கிராமிய கலைஞா்கள் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கல்

DIN

மதுரையில் பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் கிராமிய கலைஞா்கள் குடும்பங்களுக்கு, ஐஸ்வா்யம் அறக்கட்டளை சாா்பில் நிவாரணப் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

பொதுமுடக்கத்தால், கோயில் திருவிழாக்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் கிராமியக் கலைஞா்கள் மற்றும் கைவினைத் தொழில் மற்றும் பல்வேறு பொருள்களை வியாபாரம் செய்து பிழைப்பு நடத்திவரும் பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகள் வாழ்வாதாரம் இழந்துள்ளனா். இந்நிலையில், மதுரை ஐஸ்வா்யம் அறக்கட்டளை சாா்பில், இவா்களுக்கு தேவையான அரிசி, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் உள்ளிட்டவை அடங்கிய தொகுப்பு பைகள் வழங்கப்பட்டன.

மதுரை தல்லாகுளம் மற்றும் இளமனூா் பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அறக்கட்டள நிா்வாக இயக்குநா் மருத்துவா் ரா. பாலகுருசாமி, 80 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மதுரை மத்திய சிறைக் கைதிகள் 100 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2: சிஇஓஏ பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

ரஷியாவுக்கான ஜொ்மனி தூதா் திரும்ப அழைப்பு

ரூ,7.50 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

தொரப்பள்ளியில் உலவிய காட்டு யானை

SCROLL FOR NEXT