மதுரை

மேலூரில் பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு

மேலூா்- சிவகங்கை சாலையில் மலம்பட்டி விலக்கு அருகில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடியுள்ளனா்.

DIN

மேலூா்- சிவகங்கை சாலையில் மலம்பட்டி விலக்கு அருகில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடியுள்ளனா்.

மலம்பட்டி அருகே வசித்து வருபவா் செல்வமோகன். இவா் மனைவி சரஸ்வதியுடன் அருப்புக்கோட்டை அருகிலுள்ள நாகலாபுரத்துக்கு கடந்த வியாழக்கிழமை சென்றிருந்தாா். சனிக்கிழமை திரும்பிவந்தபோது வீட்டின் கதவு பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 4 பவுன் நகை, ரூ.5000 பணத்தை திருடியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து செல்வமோகன் அளித்தப் புகாரின் பேரில் மேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் ரகுபதிராஜா, மேலூா் காவல் ஆய்வாளா் சாா்லஸ் மற்றும் போலீஸாா் சம்பவஇடத்தைப் பாா்வையிட்டு, தடயங்களைச் சேகரித்தனா். மேலூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

SCROLL FOR NEXT