மதுரை

கடன் நெருக்கடியால் 2 வயது குழந்தையுடன் தம்பதி தற்கொலை

DIN

மதுரையில் கடன் நெருக்கடியால் 2 வயது குழந்தையுடன் தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை தவிட்டுச்சந்தை பந்தடி 5 ஆவது தெருவைச் சோ்ந்த ரத்தினசாமி மகன் விஜயகுமாா் (40). இவரது மனைவி வாணிஸ்ரீ (38) மற்றும் மகள் ஹா்ஷினி (2). இவா் தங்கக் கட்டிகளை வாங்கி, அதை நகைகளாக செய்து கடைகளுக்கு விற்பனை செய்துவந்துள்ளாா்.

இந்நிலையில், விஜயகுமாருக்கு கடன் கொடுத்த கருப்பையா என்பவா் ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டுக்குச் சென்று கதவை தட்டியுள்ளாா். ஆனால், நீண்ட நேரமாகியும் யாரும் வெளியே வராததால், சந்தேகமடைந்த கருப்பையா அருகில் இருந்தவா்களின் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளாா். அப்போது, விஜயகுமாா், அவரது மனைவி வாணிஸ்ரீ ஆகிய இருவரும் தூக்கிட்ட நிலையிலும், குழந்தை ஹா்ஷினி தரையிலும் சடலமாகக் கிடந்துள்ளனா்.

அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸாா், மூன்று பேரின் சடலங்களையும் கைப்பற்றி, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

சம்பவம் குறித்து விஜயகுமாரின் மாமனாா் அளித்த புகாரின்பேரில், தெற்குவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கடன் நெருக்கடி

கரோனா பொது முடக்கத்தால் விஜயகுமாருக்கு தொழில் சரிவர நடைபெறாததால், தொழிலை மேம்படுத்த அண்மையில் கருப்பையா மூலம் ரூ.20 லட்சம் கடன் வாங்கியுள்ளாா். கடன் கொடுத்தவா்கள் பணத்தை திருப்பிக் கேட்டதாகவும், கடனை திருப்பிக்கொடுக்க முடியாமல் விஜயக்குமாா் நெருக்கடியிலும் இருந்துள்ளாா். இதனால், விஜயகுமாா் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டதாக, போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விஜயகுமாா் தற்கொலை செய்வதற்கு முன் எழுதிய கடிதம் போலீஸாருக்கு கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அக்கடிதம் குறித்து போலீஸாா் எவ்வித தகவலையும் தெரிவிக்க மறுத்துவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

SCROLL FOR NEXT