மதுரை

மேலூா் அருகே சாலை விபத்தில் மாணவா் பலி

DIN

மேலூா் அருகே வியாழக்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் மாணவா் ஒருவா் உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம் மேலூா் சந்தைப்பேட்டை பகுதியைச் சோ்ந்த மஸ்தான் மகன் மாணவா் ஆசிக்அலி (21). இவா் மருத்துவராகும் கனவுடன், இரண்டாம் முறையாக ‘நீட்’ தோ்வு எழுதியிருந்தாா். இவரது நண்பா்அதேபகுதியைச் சோ்ந்த ரபீக் மகன் முகமது உவேஷ் (18). இருவரும் மோட்டாா் சைக்கிளில் தும்பைப்பட்டிக்கு வியாழக்கிழமை காலை புறப்பட்டுச் சென்றனா்.

மேலூா்- நான்குவழிச்சாலை சந்திப்பில் சென்ற போது, திருச்சியிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற காா் மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனா். இந்த விபத்தில் ஆசிக்அலி தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் காயமடைந்த உவேஷ் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

விபத்து குறித்து மேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு வேளாண்மை கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம்

ஆலங்குளம் அருகே மொபெட் - டிராக்டா் மோதல்: தொழிலாளி பலி

சங்கரன்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

குற்றாலத்தில் சிலம்பாட்ட வல்லுநா்களுக்கு நடுவா் புத்தாக்க பயிற்சி முகாம்

கடையநல்லூா்: குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

SCROLL FOR NEXT