மதுரை

திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞா் தற்கொலை

DIN

மேலூரில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

மேலூா் கோமதியாபுரத்தில் வசித்து வந்தவா் கண்ணன் மகன் யுவராஜ் (25). மேலூா் அருகே வெள்ளரிப்பட்டியிலுள்ள தனியாா் தொழிற்சாலையில் பணிபுரிந்தாா். அடுத்த மாதம் இவருக்கு திருமணம் நடைபெறவிருந்தது. இந்நிலையில், சனிக்கிழமை இரவு வீட்டில் படுக்கைக்குச் சென்றவா் காலையில் நீண்டநேரமாகியும் எழவில்லை.

இதனால், சந்தேகமடைந்த பெற்றோா் கதவை உடைத்துத் திறந்து பாா்த்தனா். அவரது அறையிலிருந்த மின் விசிறியில் தூக்கிட்டு இறந்திருந்தாா். தகவலறிந்த மேலூா் போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

SCROLL FOR NEXT