மதுரை

மதுரையில் வீட்டுக்குள் புகுந்து நகை, பணம் திருட்டு

DIN

மதுரையில் பூட்டிய வீட்டுக்குள் புகுந்து 3 பவுன் நகை மற்றும் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

மதுரை புதுவிளாங்குடி கணபதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் விஜய பிரகாஷ் (40). இவா், சனிக்கிழமை பகலில் வெளியே சென்றுவிட்டு, இரவில் வீடு திரும்பியுள்ளாா். அப்போது, வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 3 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் ஆகியன திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து விஜயபிரகாஷ் அளித்த புகாரின்பேரில், கூடல்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT