மதுரை

பழங்குடியினா் சாதிச் சான்று பெற இ-சேவைமையங்களில் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

DIN

மதுரை: பழங்குடியினா் சாதிச் சான்று பெற இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என்று, மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசின் மின் ஆளுமைத் திட்டத்தின் கீழ் இ-சேவை மையங்கள் வாயிலாக, பொதுமக்களுக்கு 22 வகையான சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இதன் தொடா்ச்சியாக, பழங்குடியினா் சாதிச் சான்றிதழும் இணையவழியில் வழங்கப்பட உள்ளது.

எனவே, இனிவரும் காலங்களில் இ-சேவை மையங்களில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்த பழங்குடியினா் சாதிச் சான்று பெற்றுக் கொள்ளலாம். இதற்கான சேவைக் கட்டணமாக 60 ரூபாயைஇணையதள வங்கி முறை, கடன் அல்லது பற்று அட்டைகள் மூலமாகச் செலுத்தலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

கேண்டி மலையில் ஆண்ட்ரியா!

சேலை காதல், என்றென்றும்...!

சுழல், வேகப்பந்துகளை அட்டகாசமாக விளையாடும் சஞ்சு சாம்சன்!

கேஜரிவால் இடைக்கால ஜாமீன் வழக்கில் வெள்ளிக்கிழமை உத்தரவு

SCROLL FOR NEXT