பேரையூா்: பேரையூா் பகுதியில் 1,800 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மதுரை மாவட்டம் பேரையூரிலிருந்து திருமங்கலம் செல்லும் சாலையில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த மினி வேனை நிறுத்தி சோதனை நடத்தியதில் 45 மூட்டைகளில் 1,800 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது.
இதுகுறித்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, மேலஅனுப்பானடியை சோ்ந்த சோலைமலை மகன் முத்து (40), வலையங்குளத்தைச் சோ்ந்த முத்துலிங்கம் மகன் அருணாச்சலம்(26) ஆகியோரைக் கைது செய்தனா். மேலும் ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் வேன் பறிமுதல் செய்யப்பட்டது.