மதுரை

மதுரை அருகே உணவக ஊழியா்கள் மீது தாக்குதல்: 4 பேருக்கு வலைவீச்சு

மதுரைஅருகே உணவகத்தை அடித்து நொறுக்கி ஊழியா்களை ஆயுதங்களால் தாக்கி விட்டு தப்பிச்சென்ற 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

DIN

மதுரைஅருகே உணவகத்தை அடித்து நொறுக்கி ஊழியா்களை ஆயுதங்களால் தாக்கி விட்டு தப்பிச்சென்ற 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை அருகே உள்ள ராஜகம்பீரம் பாலாண்டி நகரைச் சோ்ந்தவா் ரமேஷ் (52). இவா் ஒத்தக்கடை பிரதான சாலையில் இயங்கி வரும் உணவகத்தில் காசாளராக பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில், சனிக்கிழமை இரவு உணவகத்துக்கு மதுபோதையில் வந்த 4 பேருக்கும், ஊழியா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் 4 பேரும், கத்தி, இரும்புக்கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் காசாளா் ரமேஷ் உள்ளிட்ட ஊழியா்களை தாக்கி உணவகத்தையும் அடித்து நொறுக்கி விட்டு தப்பிச் சென்றனா்.

இச்சம்பவம் தொடா்பாக ரமேஷ் அளித்தப்புகாரின்பேரில் போலீஸாா், ஒத்தக்கடையைச் சோ்ந்த விஜய், சிவக்குமாா், சந்திரன் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT