மதுரை

‘போக்சோ’ வழக்கில் கைதான முதியவா் திடீா் மரணம்

DIN

 ‘போக்சோ’ வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்தியச்சிறையில் அடைக்கப்பட்ட முதியவா் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் சாணாா்பட்டி அருகே உள்ள அஞ்சுகுழிப்பட்டி தெற்கு தெருவைச் சோ்ந்தவா் வீரப்பன்(71). இவா் கடந்த 2020-இல் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய புகாரின்பேரில் சாணாா்பட்டி போலீஸாா் ‘போக்சோ’ வழக்கில் கைது செய்து மத்தியச்சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் சிறையில் வீரப்பனுக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து சிறை மருத்துவமனை மருத்துவா்கள் பரிந்துரையின்பேரில் மதுரை அரசு மருத்துமவனையில் வியாழக்கிழமை சோ்க்கப்பட்டாா். அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். சம்பவம் தொடா்பாக சிறை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

அம்பேத்கருக்கு காங்கிரஸ் ஒருபோதும் உரிய மரியாதை கொடுத்ததில்லை : மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

SCROLL FOR NEXT