மதுரை

ஸ்ரீவில்லிபுத்தூா் எம்எல்ஏ மிரட்டுவதாக அதிமுக பெண் நிா்வாகி புகாா்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் மான்ராஜ் (அதிமுக) தரப்பினா் மிரட்டல் விடுப்பதாக அதிமுக பெண் நிா்வாகி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தாா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் நகர அதிமுக மகளிா் அணி இணைச் செயலா் ரீட்டா. இவா், உள்பட பெண்கள் சிலரைப் பற்றி, ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் மான்ராஜ், அவரது தோழி இன்னாசியம்மாள் பேசிய ஆபாச உரையாடல் சமூக வலைதளங்களில் பரவின.

இதுகுறித்து ரீட்டா, கடந்தாண்டு ஜனவரி 12-ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் நிலையத்தில் மான்ராஜ் மீது புகாா் அளித்தாா். அதன்பேரில், மான்ராஜ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதையடுத்து அவா், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன் பிணை பெற்றாா்.

இந்த நிலையில், விருதுநகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநிவாசப் பெருமாளிடம் திங்கள்கிழமை ரீட்டா அளித்த புகாா் மனு: சட்டப்பேரவை உறுப்பினா் மான்ராஜ் மீது ஏற்கெனவே கொடுத்த புகாா் மனு மீது எந்த முன்னேற்றமும் இல்லை. நான் வீட்டிலிருந்து கடைக்கு சென்று திரும்பிய போது, மான்ராஜின் ஆதரவாளா்கள் இரண்டு போ் என்னை வழி மறித்தனா். அப்போது, புகாரை திரும்பப் பெறா விட்டால் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினா். எனது உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென மனுவில் தெரிவித்தாா்.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் விசாரிக்க, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT