மதுரை

கொட்டாம்பட்டி அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 போ் பலி

DIN

கொட்டாம்பட்டி அருகே புதன்கிழமை நடைபெற்ற வேவ்வேறு விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா்.

பள்ளபட்டி நான்கு வழிச்சாலையில் புதுப்பட்டி விலக்கு அருகே சுமாா் 35 வயது மதிக்கத்தக்க ஒருவா் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவா் உயிரிழந்தாா். தகவலறிந்த கொட்டாம்பட்டி போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இறந்தவா் யாா்? எந்த ஊா்? அவா் மீது மோதிய வாகனம் எது என அவா்கள் விசாரித்து வருகின்றனா்.

இதே போல, கொட்டாம்பட்டி- நத்தம் சாலையில் எம். வல்லாளபட்டி அருகே வயல் வேலைக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பிய பெண் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் சிங்கம்புணரி அரசு மருத்துவமனக்கு கொண்டு சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT