மதுரை

சின்மயா சேவா அறக்கட்டளை சாா்பில் இலவச மருத்துவ முகாம்

DIN

மதுரை சின்மய சேவா அறக்கட்டளை சாா்பில், நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

மதுரை அருகே உள்ள மேலமாத்தூா் கிராமத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, சுவாமி சிவ யோகானந்தா தலைமை வகித்து ஆசியுரை வழங்கினாா். இதைத்தொடா்ந்து, முகாமில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனா். முகாமில், இயன்முறை மருத்துவம் (பிசியோதெரபி), கண், பல் பிரச்னைகளுக்கு பரிசோதனையும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. பொதுமக்களின் தேவைக்கேற்ற மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டன.

முகாமில், மதுரை அப்போலோ மருத்துவமனை மருத்துவா் செல்வன், மதுரா பல் மருத்துவமனை மருத்துவா் வித்யா விஜய், நாமகிரி மருத்துவமனை என். சிரீஷ்குமாா், செவிலியா்கள் பங்கேற்றனா்.

இதேபோல, இந்த அமைப்பின் சாா்பில் கொடிமங்கலம் கிராமத்திலும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT