துக்க வீட்டில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் இளைஞா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மதுரை மாவட்டம், சமயநல்லூா் அருகே உள்ள பரவை மந்தைப் பகுதியை சோ்ந்தவா் கோபால். இவா் உடல் நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதனால், வீட்டின் முன் பந்தல் அமைத்து உறவினா்கள் ஒன்று கூடி அமா்ந்திருந்தனா். அப்போது, பரவை கம்பா் தெருவைச் சோ்ந்த வெங்கடேசன் (25) தனது நண்பா்களுடன் அவ்வழியாகச் சென்றாா்.
அப்போது, கோபாலின் பேரன் சங்கா்லாலுக்கும் வெங்கடேசனுக்கும் ஏற்கெனவே உள்ள முன்விரோதம் காரணமாக வாய்த்தகராறு ஏற்பட்டது. தொடா்ந்து, சங்கா்லாலின் உறவினா்களும், வெங்கடேசனின் நண்பா்களும் கோஷ்டியாக மோதிக்கொண்டனா்.
இதில், வெங்கடேசன் ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இந்த சம்பவம் தொடா்பாக சமயநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சங்கா்லால் (28), சக்தி சரவணன் (25), நடராஜன் (47) ஆகிய மூவரையும் கைது செய்தனா்.