ராமநாதபுரம்

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

DIN

முதுகுளத்தூர் அருகே பூக்குளத்தில் இளம்பெண் வெள்ளிக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
முதுகுளத்தூர் அருகே பூக்குளத்தை சேர்ந்த பாலமுருகனுக்கும், மீசல் கருங்குளத்தை சேர்ந்த ஜெயாவுக்கும் (23) ஓராண்டுக்கு முன் திருமணமானது. ஜெயாவை, பாலமுருகன் சிங்கப்பூருக்கு தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டு, மீண்டும் பூக்குளத்தில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் விடுப்பு முடிந்து மீண்டும் பாலமுருகன் சிங்கப்பூர் செல்லும்போது தானும் வருவதாகக்கூறி ஜெயா தகராறு செய்ததாக கூறப்படுகிது. ஆனால், பாலமுருகன் சொந்த ஊரிலேயே மனைவியை விட்டுவிட்டு, டிச. 4 இல், சிங்கப்பூர் சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த ஜெயா, உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். அவரது சடலத்தை போலீஸார் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு வைத்தனர். இதுகுறித்து இளஞ்செம்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். மேலும், பரமக்குடி வருவாய் கோட்டாட்சியரும் விசாரித்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா ராஜிநாமா!

லக்னௌ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

ரோஸ் நிறக் காரிகை!

பாஜகவின் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்: காங்கிரஸ் அடுக்கடுக்கான புகார்!

வெளியானது 'தலைமைச் செயலகம்' டிரைலர்!

SCROLL FOR NEXT