ராமநாதபுரம்

உலக மண்வள தினவிழா

DIN

முதுகுளத்தூர் வட்டார வேளாண்மை அலுவலக கூட்ட அரங்கில் உலக மண்வள தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதற்கு முதுகுளத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மனோகரன் தலைமை வகித்தார். தோட்டக்கலை உதவி இயக்குநர் சிவக்குமார் குழித்தட்டு மிளகாய் சாகுபடி குறித்து விளக்கினார். 
வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஹேமலதா காணொலி காட்சி மூலம் மண்மாதிரி சேகரிப்பு, நிலச்சீர்திருத்த முறைகள், இலை வண்ண அட்டை பயன்படுத்தும் விதம், அசோலாவின் நன்மைகள், உழவன் செயலி பதிவிறக்கம் குறித்து விளக்கம் அளித்தார்.  ஏற்பாட்டினை வேளாண்மை தொழில்நுட்ப திட்ட பணியாளர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT