ராமநாதபுரம்

ஆட்டோ ஓட்டுநர்களிடையே மோதல்: 2 பேர் மீது வழக்கு

DIN

பரமக்குடி பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்களிடையே சனிக்கிழமை ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்தார். இதுதொடர்பாக 2 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
பரமக்குடி போர்டிங் சாலை மீனாட்சி சுந்தர் நகரைச் சேர்ந்த ராமு மகன் ஜோதிமணி (27). இதேபோல், எமனேசுவரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் நாகநாதன், சங்கர். இவர்கள் மூவரும் ஆட்டோ ஓட்டுநர்கள்.  பரமக்குடி பேருந்து நிலையம் முன் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் வாடிக்கையாளர்களை ஏற்றுவதில் இவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. 
இந்நிலையில், சம்பவத்தன்று ஜோதிமணியை, நாகநாதன் மற்றும் சங்கர் ஆகியோர் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அவர், பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் ஜோதிமணி அளித்த புகாரின்பேரில் நாகநாதன், சங்கர் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

ஆதியின் அல்லி!

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT