ராமநாதபுரம்

அதிமுக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

DIN

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் வெள்ளிக்கிழமை அதிமுக பிரமுகரை அரிவாளால் வெட்டி விட்டு மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர்.
சாயல்குடி அருகே பெரியகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் எம்.பி. பாண்டியன். அதிமுக பிரமுகர். இவர் சாயல்குடி பிரதான கடைத் தெருவில்  இருசக்கர வாகன விற்பனை ஏஜென்சி நடத்தி வருகிறார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலையில் கடையில் இருந்த பாண்டியனை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடி விட்டனர். இதில் காயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு சாயல்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, பின் மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து சாயல்குடி காவல் ஆய்வாளர்  ஜோக்கிம் ஜெரி தலைமையிலான போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பார்பி’ ஆண்டிரியா!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.920 குறைவு!

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலிடம்: தெற்கு ரயில்வே

கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள் கைது!

SCROLL FOR NEXT