முதுகுளத்தூர், சித்திரங்குடி, காத்தாகுளம், ஆகிய ஊர்களில் அம்மன் கோயில்களில் புரட்டாசி பௌர்ணமியை முன்னிட்டு திங்கள்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
முதுகுளத்தூர், எம்.தூரி, செல்வநாயகபுரம் ஆகிய கிராமக்களுக்கு பாத்தியப்பட்ட செல்வி அம்மன் கோயிலில் புரட்டாசி பௌர்ணமியையொட்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, பொது அன்னதானம் நடைபெற்றது. அதே போல் காத்தாகுளம் கிராமத்தில் உள்ள காளிஅம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் மகளிர் மன்றக் குழுக்கள் செய்திருந்தனர்.
அதே போல், சித்திரங்குடியில் சீலைக்காரி அம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னாள் கிராமத் தலைவர் ராமசந்திரன் தலைமை வகித்தார். கோவில் நிர்வாக கமிட்டி முன்னாள் தலைவர் வேல் முன்னிலை வகித்தார். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாட்டினை கோயில் பூசாரி போஸ் செய்திருந்தார். இதில் ஏராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.