ராமநாதபுரம்

முதுகுளத்தூர் அருகே மனைவியை வெட்டிய கணவர் மீது வழக்கு

DIN

முதுகுளத்தூர் அருகே புளியங்குடி கிராமத்தில் குடும்பத் தகராறில் மனைவியை வெட்டிய கணவர் மீது ஞாயிற்றுக்கிழமை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள புளியங்குடியை சேர்ந்தவர் சசிக்குமார் (40). இவரது மனைவி சத்யா (34). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளன. சில ஆண்டுகளாக கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரே ஊரில் பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு கிராம பெரியவர்கள் முன்னிலையில் இருவரும் சேர்ந்து வாழ வேண்டுமெனக் கூறி பேச்சுவார்த்தை நடத்தியதில் இருவருக்கும் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் சனிக்கிழமை இரவு சத்யாவின் வீட்டிற்கு சென்று தன்னுடன் வாழ வருமாறு சசிக்குமார் அழைத்ததாகக் கூறப்படுகிறது. 
இதற்கு மறுப்பு தெரிவித்ததால் கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளைக் கொண்டு சத்யாவை வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த சத்யா ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து முதுகுளத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சசிக்குமாரை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

SCROLL FOR NEXT