ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே  வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

DIN

ராமநாதபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் நகை, பணத்தை திருடிச்சென்றதாக வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் அருகேயுள்ளது போக்குவரத்து நகர். இங்கு வசிப்பவர் சந்திரன் (67). இவர் தனது வீட்டைப் பூட்டிவிட்டு காரேந்தல் கிராமத்துக்கு வியாழக்கிழமை சென்றுள்ளார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை அவரது வீட்டின் முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. 
வீட்டினுள் சென்று அவர் பார்த்த போது, பீரோவில் இருந்த 6 பவுன் நகைகள், ரூ.19 ஆயிரத்தைக்  மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் கேணிக்கரை போலீஸார் விசாரணை நடத்தினர்.  கைரேகை நிபுணர்கள்  ரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து கேணிக்கரை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT