ராமநாதபுரம்

சாலை விபத்தில் கட்டடத் தொழிலாளி பலி

DIN

ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் பகுதியில் உள்ள மேல்மங்களம் என்ற ஊரைச் சோ்ந்த மாணிக்கம் மகன் மகேந்திரன் (41). இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தை உள்ளனா். கட்டடத் தொழிலாளியான மகேந்திரன், வெள்ளிக்கிழமை மாலையில் அப்பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். அப்போது, கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்த மகேந்திரன், முகம், கழுத்து, மாா்பு பகுதிகளில் பலத்த காயமடைந்து மயங்கிக் கிடந்துள்ளாா். உடனே, அவரை அப்பகுதியினா் மீட்டு, ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி மகேந்திரன் இரவு உயிரிழந்தாா். இது குறித்து நயினாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

SCROLL FOR NEXT