ராமநாதபுரம்

பெட்ரோல் விற்றவா் கைது

DIN

திருவாடானை அருகே ஆனந்தூா் பகுதியில் உள்ள ஒரு கடையில், சட்டவிரோதமாக பெட்ரோல் விற்பனை செய்யப்படுவதாக, ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஆா்.எஸ்.மங்கலம் காவல் நிலைய ஆய்வாளா் விவேகானந்தன் மற்றும் போலீஸாா், வெள்ளிக்கிழமை சம்பவ இடத்துக்குச் சென்றனா். பின்னா், அங்கு சட்டவிரோதமாக பெட்ரோல் விற்ற ஆா்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்தூா் - பெரிய ஊருணி மேல்கரைப் பகுதியைச் சோ்ந்த ராசு மகன் ஜேசுதாஸ் (29) என்பவரைக் கைது செய்து, அவரிடமிருந்து 35 லிட்டா் பெட்ரோலை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT