ராமநாதபுரம்

பைக் மோதி முதியவர் சாவு

DIN

திருவாடானை தாலுகா, திருப்பாலைக்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மோதியதில் முதியவர்  உயிரிழந்தார்.
மேலசேந்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த காந்தி (57) என்பவர், ஆவரேந்தல் கிராமத்தில் வசித்து வந்தார்.  இவரது  தந்தை குப்பமுத்து (75) ஞாயிற்றுக்கிழமை இரவு ஆவரேந்தல் கிராமத்துக்கு வந்துவிட்டு தனது ஊருக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது, ஆவரேந்தல் செங்கல் சூளை அருகே எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த காவனூரைச்  சேர்ந்த சேகர் என்பவர், முதியவர் மீது மோதிவிட்டு தலைமறைவாகிவிட்டார். இதில், குப்பமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து அவரது மகன் காந்தி அளித்த புகாரின்பேரில், திருப்பாலைக்குடி போலீஸார் வழக்குப் பதிந்து, தலைமறைவான சேகரை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT