ராமநாதபுரம்

மின் கம்பியில் உரசி வைக்கோல் ஏற்றிச் சென்ற டிராக்டரில் தீ

DIN

முதுகுளத்தூர் அருகே மொச்சிகுளம் கிராமத்தில் வியாழக்கிழமை வயலில் இருந்து டிராக்டரில் வைக்கோலை  ஏற்றிச் சென்ற போது மின் கம்பியில் உரசியதால் தீ பற்றியது.
 முதுகுளத்தூர் அருகே மொச்சிகுளம் கிராமத்தில் வயலில் நெல் அறுவடை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது வயலில் இருந்த மீதமுள்ள வைக்கோலை டிராக்டர் மூலம் வயல் உரிமையாளர்கள் சேகரித்து ஏற்றிச் சென்றனர். 
அப்போது மொச்சிகுளம் கிராமத்தின் அருகே மின்கம்பிகள் தாழ்வாக சென்று கொண்டிருந்தது தெரியாமல் டிராக்டர் அதில் உரசியது. இதில் வைக்கோல் பாரத்தில் திடீரென தீப் பற்றியது. இது குறித்து தகவல் அறிந்த முதுகுளத்தூர் தீயணைப்பு  நிலைய அலுவலர் லிங்கம் தலைமையிலான மீட்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் வைக்கோல் முழுவதும் எரிந்து சேதமானது. அதிஷ்டவசமாக தீ விபத்தில் டிராக்டர் சேதமின்றி தப்பியது. 
இப்பகுதியில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பியை உடனடியாக மாற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

SCROLL FOR NEXT