ராமநாதபுரம்

திருவாடானை அருகே வீட்டுக்குள் புகுந்து 9 பவுன்   நகைகள் திருட்டு

DIN


திருவாடானை அருகே வியாழக்கிழமை இரவு வீட்டுக்குள் புகுந்து 9 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
திருவாடானை அருகே செவ்வாய்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர்  ஸ்டீபன்தாஸ். இவரது மனைவி சகாயம் மலர்( 32). இவர் வியாழக்கிழமை இரவு கோயில் திருவிழாவிற்கு வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். மறுநாள் வெள்ளிக்கிழமை மாலை திரும்பி வந்து பார்த்த போது வீடு திறந்து கிடந்துள்ளது. வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை திறந்து  உள்ளே புகுந்து பீரோவில் இருந்த, 9 பவுன் நகைகள் மற்றும் ஒரு ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவற்றை திருடிச் சென்றனர்.
இதுகுறித்து சகாய மலர் அளித்த  புகாரின் பேரில் திருவாடானை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாங்காங் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தினருடன் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா் ஆலோசனை

தென்னை மரத்தில் பரவும் புதிய வகை நோய்த் தாக்குதல் குறித்த விழிப்புணா்வு

பி.பி.ஜி. கல்லூரியில் பட்டமளிப்பு விழா

‘பல்லடத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை’

கிராமப்புறங்களில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு உதவி

SCROLL FOR NEXT