ராமநாதபுரம்

பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞர்கள் 4 பேர் கைது

DIN

கமுதியில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞர்கள் 4 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
கமுதி கண்ணார்பட்டியைச் சேர்ந்தவரும், தற்போது மதுரை முனியாண்டிபுரத்தில் வசிப்பவருமான நாகன் மனைவி விஜயசாந்தி (26). இவர், தனது கணவர் நாகன், உறவினர் மகாலட்சுமி உள்பட தனது குடும்பத்தினருடன், குலதெய்வம் கோயிலுக்கு சென்று விட்டு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கண்ணார்பட்டிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். 
அப்போது, கமுதி மீனாட்சி நகர் நல்லுமுருகன், கணேஷ்பாண்டி, ஆதிபராசக்தி நகர் சூர்யா, செந்தனேந்தல் செல்வக்குமார் ஆகியோர், விஜயசாந்தியை கேலி செய்து, தகாத வார்த்தைகளால் பேசி, தவறாக நடக்க முயன்றுள்ளனர். 
இதனால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விஜயசாந்தி அளித்த புகாரின்பேரில், கமுதி காவல் ஆய்வாளர் முத்துக்குமார், வழக்குப்பதிந்து நல்லுமுருகன், கணேஷ்பாண்டி, சூர்யா, செல்வகுமார் ஆகியோரை பாலியல் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT