ராமநாதபுரம்

தேவகோட்டை அருகே ஒப்பந்ததாரரிடம் ரூ.4 லட்சம் பறிமுதல்

DIN


தேவகோட்டை அருகே உரிய ஆவணங்களின்றி ஒப்பந்ததாரர் எடுத்துச்சென்ற ரூ.4 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர். 
தேவகோட்டை அருகே ஆராவயல் பகுதியில் வட்டாட்சியர் மூர்த்தி   தலைமையில், ஆராவயல் காவல் சார்பு ஆய்வாளர் சூசை மைக்கேல் ராஜ் உள்ளிட்டோரைக் கொண்ட பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த கண்டதேவியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் சொர்ணலிங்கத்திடம்  ரூ. 4 லட்சத்து 2 ஆயிரத்து 890 இருந்தது. அப்பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் அலுவலர்கள் பறிமுதல் செய்து கருவூலத்தில்  ஒப்படைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

SCROLL FOR NEXT