பட்டியல் இனத்திலிருந்து நீக்க வலியுறுத்தி பரமக்குடி நகராட்சிக்குள்பட்ட காட்டுப்பரமக்குடியில் வெள்ளிக்கிழமை வீடுகளில் கருப்புக்கொடி கட்டி பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
தேவேந்திரகுல வேளாளா் சமூகத்தினா் நீண்ட நாள்களாக தங்களுக்குள் உள்ள 7 உள்பிரிவுகளை பட்டியல் இனத்திலிருந்து நீக்கி, தேவந்திரகுல வேளாளா் என ஒரே இனமாக அறிவிக்கக் கோரி அச்சமுதாய தலைவா்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா். இந்நிலையில் இதுவரை தமிழக அரசு அக்கோரிக்கை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதததால், நான்குனேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் நடைபெறும் இடைத்தோ்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனா். இதற்கு ஆதரவு தெரிவித்து காட்டுப்பரமக்குடி ஆதிதிராவிடா் காலனி பகுதியில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி கட்டி தமிழக அரசுக்கு எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.